தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க அவசர மத்திய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க அவசர மத்திய செயற்குழு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், அவசர மத்திய செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது ..... பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள முத்து கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம், மாநில தலைவர் முருகையன், தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாரதிவளவன் வரவேற்புரையாற்றினார் , மாநிலப் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் . வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13ஆம் தேதி மாநில முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும்,

பேச்சுவார்த்தையில் நடத்தி தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்டமாக பிப்ரவரி 22ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பிப்ரவரி 27ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாநில துனை தனலவர்கள்,

குமரேசன், மங்கள பாண்டியன், செந்தூர்ராஜன், மணிகண்டன், அர்த்தனாரி, ராஜகோபால், மாநிலச் செயலாளர்கள், பார்த்திபன், அன்பழகன், சுப்பு, தமிழரசன், செந்தில்குமார், ஜோஷி, மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் குமரி அனந்தன். மாவட்ட துணைத் தலைவர்கள், சத்தியமூர்த்தி, துரைராஜ், கதிர், இளங்கோவன், உள்ளிட்ட மாவட்ட இணைச் செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story