தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநாடு

விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் ஒன்றிய மாநாடு விருதுநகர் ஏஐடியுசி அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது.எபினேசர் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாலமுருகன் நகர செயலாளர் முத்துக்குமார் ஒன்றிய செயலாளர் சக்கணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொது செயலாளர் தலைவர் பி. கிருஷ்ணசாமி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். மாநாட்டில் தலைவராக மலர்கொடி, துணைத் தலைவர்களாக ஜெலின்மேரி பாண்டி லட்சுமி, முருகாயி, ராணி ஆகியோரும், செயலாளராக வள்ளி பொருளாளராக காளியம்மாள் துணைச் செயலாளர்கள் முனியம்மாள் மணிமேகலை கலா ராணி சங்கரேஸ்வரி மாரீஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story