சேலத்திற்கு நாளை தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் வருகை

சேலத்திற்கு நாளை தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் வருகை

சேலத்திற்கு நாளை தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் வருகை தருவதாக கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.


சேலத்திற்கு நாளை தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் வருகை தருவதாக கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் நாளை காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.

எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags

Next Story