கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாத்  ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

கடலூரில் மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி கடலூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஏ. முகம்மது யாசின் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முகம்மது ஒலி ஆா்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் ஏ. அப்துல் காதா், மாவட்டத் துணைத் தலைவா் ஏ. யாசா் அரஃபாத், துணைச் செயலா் ஏ. உபைதுல்லாஹ் முன்னிலை வகித்தனர்.

Tags

Next Story