தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுக்குழு கூட்டம்

வேல்முருகன் எம்.எல்.ஏ 

தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை நடக்கிறது

ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள எம்.ஆர்.பி. திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

இதில் மாநில நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் மாநகர பகுதி தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும், உள் கட்சி கட்டமைப்பு மற்றும் உள்கட்சி தேர்தல் பற்றியும், சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் கட்சி பொதுக்குழு நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று, கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், சேலம் மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், ராஜ்குமார், அய்யப்பன், மாவட்ட தலைவர்கள் அமிர்தராஜ், முருகன், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நீலமேகம், திருநாவுக்கரசு, நீலகண்டன், பிரபு, யுவராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story