தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு குழு கூட்டம்:

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு குழு கூட்டம்:
எலச்சிபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு கூட கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையத்தில் நடந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்புகுழு கூட்டத்திற்கு, நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் நடந்துமுடிந்த வேலைகள் சம்மந்தமாக பேசினார். இதில், 2023 உறுப்பினர் பதிவு கணக்கு முடிவுகள், வட்டூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டாவுக்காக மனுகொடுத்து, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, 27 ல் வட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பாக, காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டும். வட்டூர் பள்ளிபாளையத்தில் உள்ள நாடார் மற்றும் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு மயானபாதை அமைத்துதர வேண்டும். தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாதஇதழ் வரக்கூடிய காலங்களில் வாங்குவதற்கு மாநிலகுழு நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story