வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்திய தமிழச்சி தங்கபாண்டியன்

தியாகராயர் நகர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழ்நாட்டில் பல இடங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கி உள்ள நிலையில், ஒரு சில தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களும் நட்சத்திரங்களாக காணப்படுகின்றனர்.அந்த வகையில் தென் சென்னையில் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜனும் ,திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியனும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் .

ஆகவே தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.அந்த வகையில் நேற்று மயிலாப்பூர்,சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்28.03.2024ஆகிய இன்று, தியாகராயர் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் .இந்த வாக்கு சேகரிப்பு மாவட்டச் செயலாளர் மயிலை திரு.த.வேலு எம்.எல்.ஏ தலைமையிலும் , திரு.ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது .

Tags

Next Story