தேர்தல் திருவிழாவில் மக்களோடு மக்களாக பயணித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சைதாப்பேட்டை- கோட்டூர்புரம் மக்களுக்கு நன்றி தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன்

பெண்களின் முன்னேற்றதிற்கும் சாமானிய மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் தற்போது தென் சென்னை தொகுதி வேட்பாளராக களமிறங்கி தேர்தல் திருவிழாவை களைகட்டி வருகிறார் .நீலங்கரை , வேளச்சேரியில் வாக்கு சேகரித்ததை அடுத்து விருகம்பாக்கம் வடக்குப் பகுதி,அடையாறு, தாமோதரபுரம் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொது மக்கள் பட்டாசுகள் வெடித்தும் ,தேங்காய் உடைத்தும் பலூன்களை பறக்கவிட்டும், தங்கள் உற்சாக வரவேற்பை அளித்ததுடன் வாழ்த்துமடல்கள் ,பரிசு பொருட்கள் மற்றும் மனதை தொடும் கவிதைகளும் தமிழச்சி தங்கபண்டியனுக்கு வழங்கினர். இது குறித்து விடியோ ஒன்றை பதிவிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் மக்களோடு மக்களாக பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் . இறுதியாக 31.03.2024 அன்று சைதாப்பேட்டை- கோட்டூர்புரத்தில் வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K செல்வபெருந்தகை MLA,ராஜாMLA,பிரபாகர்,தனசேகரன்KKNagar,பகுதிச் செயலாளர்கள் மு.ராசா, கே.கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் .மேலும் வட்டச் செயலாளர்கள் கோவிந்தராஜன், ராசா, மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story