பிளஸ் டூ மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் பாராட்டு

பிளஸ் டூ மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் பாராட்டு

பாராட்டு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தினர்

தூத்துக்குடியில் பிளஸ் டூ தேர்வில் 589 மதிப்பெண் எடுத்த மாணவி ஷாலினியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி பொன் சுப்பையா முதலியார்புரத்தை சேர்ந்த டிரைவர் ராதாகிருஷ்ணன் மகள் ஷாலினி தூத்துக்குடி அரசு உதவி பெறும் சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பிளஸ் டூ தேர்வில் 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

அவருக்கு விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவி ஷாலினியை பாராட்டி பரிசு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் விஜய் தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், கண்ணன், பாலா, ஜான்சன், சுதாகர், விஜயகுமார், அந்தோணி, மாரியப்பன், ஜெயந்தி, பெத்துராஜ், அண்டோ, அக்னல், பிரியதர்ஷினி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவி ஷாலினி தன்னை பாராட்டிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story