வாணியம்பாடியில் தமுமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

வாணியம்பாடியில் தமுமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

பேருந்தை தள்ளும் பயணிகள்

வாணியம்பாடியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் புதியதாக இயக்கப்பட்ட அரசு பேருந்தை பயணிகள் தள்ளி இயக்கும் அவலநிலை! திருப்பத்தூர் அரசு பனிமனையிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

இங்கிருந்து 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் புதியதாக 20 பேருந்துகள் விடப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு புதிய பேருந்து இயக்கப்படுகிறது. இன்று பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தருமபுரி செல்லும் பேருந்து ஆன் ஆகவில்லை. அதனால் பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி தள்ள சொல்லியதால் பயணிகள் முகம் சுழித்து சென்றனர்.

அரசு பேருந்து சரியாக பராமரிக்க தவறியதால் தான் இந்த நிலை உள்ளது என்றும் இதே போன்று தொடர்ந்து இருக்குமானால் தனியார் பேருந்தில் தான் செல்ல நேரிடும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Tags

Next Story