சிபிஎம் நிர்வாகிகளுடன் தஞ்சை திமுக வேட்பாளர் சந்திப்பு

சிபிஎம் நிர்வாகிகளுடன் தஞ்சை திமுக வேட்பாளர் சந்திப்பு
முரசொலி சந்திப்பு
தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு .
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறும், உடன் இணைந்து தேர்தல் பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார். அவரை, மூத்த தலைவர் என்.சீனிவாசன், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்று வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்து சால்வை அணிவித்தனர். அப்போது, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பக்கிரிசாமி, பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், என்.சுரேஷ் குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சிவகுரு, களப்பிரன், கே.காந்தி, என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்கம் ஆர். புண்ணியமூர்த்தி, அரசு போக்குவரத்து கழகம் சிஐடியு மத்திய சங்கப் பொருளாளர் கே.ராமசாமி, ப.சத்தியநாதன், மாநகரக் குழு உறுப்பினர் வீ.கரிகாலன், எம்.ராஜன், சி.ராஜன், கரந்தை பகுதி கிளைச் செயலாளர் ஜோதி மணி உள்ளிட்ட பல்வேறு அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் ச.முரசொலியுடன் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) , டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்) உடன் வந்திருந்தனர்.

Tags

Next Story