இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்து தஞ்சை பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்து தஞ்சை பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்து தஞ்சை பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், பனமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், மேலத்தூா் காளியம்மன் கோயிலை சோ்ந்தவா் மதியழகன். இவரது மனைவி விஜயா (40) இவா்கள் இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். பனமங்கலம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், விஜயா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற சமயபுரம் போலீஸாா் விஜயாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags

Next Story