ஏற்காட்டில் தபசு கால கலந்தாய்வு கூட்டம்

ஏற்காட்டில் தபசு கால கலந்தாய்வு கூட்டம்

ஏற்காட்டில் தபசு கால கலந்தாய்வு கூட்டம்

ஏற்காட்டில் தபசு கால கலந்தாய்வு கூட்டத்தில் பேராயர் சந்திரசேகர் பங்கேற்பு
சேலம் மாவட்டம் ஏற்காடு அமைதி மையத்தில் தபசு கால கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சேலம் திருமண்டல பொறுப்பு பேராயரும், தஞ்சை திருமண்டல பேராயருமான சந்திரசேகர் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, சபை மக்களிடம் நடந்து கொள்ளும் முறையும், மற்றவர்களுக்கு குருமார்களின் மனைவிமார்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சி.எஸ்.ஐ. திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ரோஸ்லின்ட் சந்திரசேகர், திருமண்டல உபதலைவர் எழில் ராபர்ட் கெவின், குருத்துவ செயலாளர் ராஜா மான்சிங், ஆயர் சுதர்சன், திருமண்டல பேரவை உறுப்பினர் தியாபி மற்றும் சேலம்- ஈரோடு சி.எஸ்.ஐ. திருமண்டலத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் மற்றும் தஞ்சை- திருச்சி திருமண்டலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குருமார்களின் மனைவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆயர் ஜோயல் செய்து இருந்தார்.

Tags

Next Story