பாராசூரில் ரூ.1.50 கோடி மதிப்பில் தார் சாலை

பாராசூரில் ரூ.1.50 கோடி மதிப்பில் தார் சாலை

சாலை பணி துவக்கம் 

செய்யாறு அருகே பாராசூரில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு ஊராட்சி ஒன்றியம் பாராசூர் கிராமத்தில் பாராசூர் முதல் நெல்வாய் கூட்ரோடு வரை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலை அலகு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் நாடாளுமன்ற தேர்தல் செய்யாறு பொறுப்பாளர் ஆர் டி அரசு,வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சரோஜா ரகு , மகாலட்சுமி அருள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story