வாழக்காடு கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணி

வாழக்காடு கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணி

தார்சாலை அமைக்கும் பணி

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேராமந்தை, மற்றும் வாழக்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேராமந்தை A. முருகன் எடுத்த முயற்சியால் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு மலைவாழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்று அடிப்படை தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை வசதிகள் அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கும் ஊரக வளர்ச்சித் துறைக்கும் உள்ளாட்சித் துறைக்கும்,

மலைவாழ் மக்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேராமந்தை A.முருகன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் மற்றும் பணி செய்த ஊர் பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார்.

Tags

Next Story