தார் சாலைப்பணிகள் தாமதம்; பொதுமக்கள் அதிருப்தி

தார் சாலைப்பணிகள் தாமதம்; பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையத்தில் சாலைப்பணிகள் தாமதமாவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.  

குமாரபாளையத்தில் சாலைப்பணிகள் தாமதமாவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கத்தாளபேட்டை பகுதியில், தார்ச்சாலைப்பணி நடைபெற வேண்டி, நீண்ட நாட்களுக்கு முன், சாலைகளை கொத்தி எடுத்து, ஜல்லிகள் போடப்பட்டன. தார்ச்சாலை அமைக்க காலதாமதம் ஆவதால், நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். விசைத்தறி தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அதிகம் இருப்பதால், நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் எடுத்து வரவும் டெம்போக்கள் கூட செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் விரைவில் இந்த சாலையை புதிய தர்சாலையாக,மாற்ற இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story