மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

கலெக்டர் ஷ்ரவன்குமார் 

மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்- கலெக்டர் ஷ்ரவன்குமார்.
கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் வரும் 21 ம் தேதி மற்றும் மே 1 ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கடைகள் மூடப்படும். இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், வரும் மே 1ம் தேதி மே தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்றயை தினங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மேற்பார்வையார்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தனியார் மதுகூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story