டாஸ்மாக் மதுவில் கலப்படம்; 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

டாஸ்மாக் மதுவில் கலப்படம்; 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

டாஸ்மாக்

ஊட்டியில் டாஸ்மாக் மதுவில் கலப்படம் செய்து விற்ற புகாரின் பேரில் 2 மேற்பார்வையாளர்கள், 3 விற்பனையாளர்கள் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினசரி 1.5 கோடிக்கு விற்பனையாகிறது. ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு சில நேரங்களில் போதை வஸ்துகளை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை மதுவில் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படையினர் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மதுக்கடையில் இருந்து குறிப்பிட்ட மது பாட்டில்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுவில், தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மணிக்கூண்டு டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த உமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மணிக்கூண்டு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றி வரும் மணி, சிவகுமார் மற்றொரு சிவகுமார் என 3 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story