டாரஸ் லாரி திருடியவர் கைது !

டாரஸ் லாரி திருடியவர் கைது !

 கைது

கள்ளக்குறிச்சி அருகே வேலையை விட்டு நீக்கிய கோபத்தில், டாரஸ் லாரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே வேலையை விட்டு நீக்கிய கோபத்தில், டாரஸ் லாரி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த பம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் மகன் செல்வராஜ், 53; ரைஸ்மில் உரிமையாளர். இவர், கடந்த மார்ச் 29ம் தேதி இரவு 10:00 மணியளவில், ரைஸ்மில் வளாகத்தில் டாரஸ் லாரியை நிறுத்தியிருந்தார். மறுநாள் 30ம் தேதி அதிகாலை பார்த்த போது லாரியைக் காணவில்லை. ரைஸ்மில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடியைச் சேர்ந்த சிவராஜ் மகன் விஷால், 20; லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. விஷால் ஏற்கனவே ரைஸ் மில்லில் டிரைவராக பணிபுரிந்தார். அப்போது, நடவடிக்கை சரியில்லாததால் சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விஷால், லாரியை திருடியது தெரிந்தது. இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விஷாலை கைது செய்தனர்.

Tags

Next Story