பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது.

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தயேசுதாஸ் மகன் சௌந்தர்ராஜன் 57 இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் அன்பு நகர் பகுதியில் தங்கி, பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி. தூயமரியன்னை நடுநிலைப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்,

இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் இவர் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளது தெரிவந்தது, இதனை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு , ஆசிரியர் சௌந்தர்ராஜன் மீது மாணவிகளிடம் பாலியல் ரீதியாக நடந்தது குறித்து கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் நேரில் சென்று சௌந்தர்ராஜன் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்

இதில் அவர் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து, அரும்பாவூர் போலீசார் சௌந்தரராஜன் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story