மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ?

மாணவிகளிடம் அத்துமீறிய  ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ?

பெற்றோர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரியில் உள்ள வித்தியா மந்தீர் @ எஸ்டான்சியா பள்ளியில், ஆசிரியர் ஒருவர் பள்ளி குந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இதை பள்ளி தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்றபோது அவர் அலட்சியப்போக்குடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் காவல்நிலயத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு FIR பதிவு செய்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக பதில் கொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற கோரியும் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியின் முன் குவிந்துள்ளனர். மேலும் மாணவர்களையும் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags

Next Story