திருக்கோவிலூரில் ஆசிரியர் செயின் பறிப்பு

திருக்கோவிலூரில் ஆசிரியர் செயின் பறிப்பு

பைல் படம் 

திருக்கோவிலுாரில் போக்குவரத்து மிகுந்த நான்குமூனை சந்திப்பில் ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலுார் சைலோமைச் சேர்ந்தவர் தமிழ்வில்சன் மனைவி ஜாக்லின் மேரி, 37; மணம்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 5.45 மணிக்கு பணி முடிந்து் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். திருக்கோவிலுார் உயர்மட்ட பாலத்திலிருந்து, நான்கு முனை சந்திப்பிற்கு இறங்கும் வழியில், பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென பைக்கை முன்னாள் நிறுத்தியதால் ஜாக்லின் மேரி செய்வதறியாது திகைத்தபொழுது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரது கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து கடலுார் ரோடு வழியாக பைக்கில் தப்பினர்.

ஆசிரியை கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் துரத்தியும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலைப் பொழுதில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே நடந்த இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story