செங்கல்பட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

செங்கல்பட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
செங்கல்பட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி மாவட்ட தலைவர் மகாலட்சுமி வரவேற்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் முருகன் கலந்துக்கொண்டு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து உறையாற்றினார்.

Tags

Next Story