மாணவிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு கல்லூரியில் தொழில் நிர்வாகவியல் சார்பாக மாணவிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் தொழில் நிர்வாகவியல் சார்பாக ராஜீவ் காந்தி நேஷனல் இளைஞர் முன்னேற்றம் அமைப்பின் நிதி உதவியுடன் மாணவிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தொழில்நுட்ப நிர்வாகவியல் துறை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார்.இந்நிகழ்வில் நிலக்கோட்டை குளத்துப்பட்டி தனியார் மில் தொழிற்சாலை தொழில் நுட்ப துணைத் தலைவர் முருகேசன், ஆங்கில துறை பேராசிரியர் லதா, பயிற்சி திட்டத்தின் அமைப்புச் செயலாளர்கள் திலீபன், கார்த்திகேயன் உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் சுபஸ்ரீ நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story