மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தற்கொலை

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

சிறுகனூர் அருகே உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் மணி என்கின்ற தினேஷ்(24). ஐடிஐ முடித்துள்ள தினேஷ், மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகனூர் அருகே ஆயக்குடியில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 1 ந்தேதி காளவாய்ப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் 05-02-2024 ம் தேதி மாலை 4 மணியளவில் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story