இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

சேத்தியாத்தோப்பில் இளம்பெண் ஒருவர் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேத்தியாத்தோப்பில் இளம்பெண் ஒருவர் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி கிராமத்தை சேர்ந்தத சுதாகர் மனைவி சுந்தரி இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சுந்தரி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு வீட்டில் சுந்தரி தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்ததும் சம்பவ‌ இடத்திற்கு விரைந்து வந்த ஒரத்தூர் போலீசார் சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுந்தரியின் அண்ணன் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story