வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் தலை வைத்து தற்கொலை!ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த சீனு மகன் திருப்பதி (29) இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திவ்யா அவருடைய தாயார் வீட்டிற்கு சென்ற நிலையில் திருப்பதி தனியாக வீட்டில் வசித்து வந்தார் மேலும் மன உழைச்சலில் இருந்த திருப்பதி நேற்று இரவு முதல் காணாமல் போணார்.

அதனை தொடர்ந்து இன்று பாச்சல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு ஆண் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மன உழைச்சலில் சுற்றி திரிந்து வந்த திருப்பதி என்பது தெரிய வந்தது. பின்னர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story