வாலிபர் தற்கொலை
நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (18) மது பழக்கத்துக்கு அடிமையான நிலையில், காற்றாலை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (18). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாச்சியார்புரம் காற்றாலை கோபுரத்தில் ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த விகேபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விகேபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
Next Story