இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ விசாரணை

இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ விசாரணை

தலைவாசல் அருகே ஊனத்தூரை சேர்ந்த வினோதினி காதல் திருமணம் செய்த ஓராண்டில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி விசாரணை மேற்கொண்டுள்ளார். 

தலைவாசல் அருகே ஊனத்தூரை சேர்ந்த வினோதினி காதல் திருமணம் செய்த ஓராண்டில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பழகி. இவருடைய மகள் வினோதினி (22 ) பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் பனைமடல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர், இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென வினோதினி தனது தாய் வீடான ஊனத்தூருக்கு வந்துள்ளார் ஆனாலும் அவர் சோகத்துடனும் விரக்தியுடனும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை எடுத்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் வினோதினியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் இறந்ததால் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story