இளம்பெண் வாலிபர் மாயம்: போலீசில் புகார்!

இளம்பெண் வாலிபர் மாயம்: போலீசில் புகார்!

காவல்துறை விசாரணை

]

இளம்பெண் வாலிபர் மாயம்: போலீசில் புகார்!
கீரனுார் அருகே உள்ள அம்மாசத்திரம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (26). தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த காயத்திரி(21) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காயத்திரி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி நிமித்தமாக மருத்துவமனைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதேபோல் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சக்திவேல்(24). அதே பகுதியில் உள்ள கிரஷரில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும் பவில்லை. இதுகுறித்த புகார்களின்பேரில் கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story