கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பைல் படம் 

தியாகதுருகத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, தப்பியோடியமற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு மலையம்மன் கோவில் அடிவாரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்த 2 பேர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். போலீசார் சோதனை செய்ததில், அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி அடுத்த வி.புதுார் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மூவேந்திரன், 24; என தெரிந்தது உடன் அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சித்தலுார் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆதி, 25; என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story