கஞ்சா விற்ற வாலிபர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்.

பைல் படம் 

துறையூர் அருகே அழகாபுரியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அழகாபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அழகாபுரி உடையார் தெருவைச் சேர்ந்த 28 வயதான தீபக் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story