லேப்டாப் திருடிய வாலிபர் கைது

லேப்டாப் திருடிய வாலிபர் கைது

பைல் படம்

அம்மாபேட்டையில் திருமண மண்டபத்தில் புகுந்து லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஆன்ட்ரியா (26). பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது தோழியான சேலத்தை சேர்ந்த மோகனபிரியா என்பவரின் திருமணம் இரு தினங்களுக்கு முன்பு அம்மாப்பேட்டையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள, நேற்று முன்தினம் ஆன்ட்ரியா சேலம் வந்திருந்தார். அம்மாப்பேட்டை ரவுண்டானா அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனது லேப்டாப் மற்றும் உடமைகள் அடங்கிய சூட்கேஸை வைத்திருந்தார். அன்றிரவு சூட்கேஸில் வைத்திருந்த லேப்டாப் மாயானது.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த எஸ்ஐ சரவணன், திருமண மண்டபத்தில் புகுந்து லேப்டாப்பை திருடிய அம்மாப்பேட்டை குருநாதர்காடு பகுதியைச்சேர்ந்த சந்தோஷ்குமார் (32) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story