சேலத்தில் வங்கியில் காப்பர் ஒயர் திருட முயன்ற வாலிபர் கைது

சேலத்தில் வங்கியில் காப்பர் ஒயர் திருட முயன்ற வாலிபர் கைது

சேலத்தில் வங்கியில் காப்பர் ஒயர் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.


சேலத்தில் வங்கியில் காப்பர் ஒயர் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகாபுரத்தில் யூனியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ள வெளிப்புற சுவற்றில் ஏ.சி. பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வாலிபர் ஒருவர் அங்கு வந்து ஏ.சி. பெட்டியில் இருக்கும் காப்பர் ஒயரை திருடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வங்கியின் நகை மதிப்பீட்டாளரான குகை மூங்கப்பாடியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அழகாபுரம் போலீசாரை அங்கு வரவழைத்து அவர்களிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கோரிமேடு கோம்பைப்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story