வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
எரவாஞ்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட அதம்பார் பகுதியினை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் கார்த்திக். இவர் இந்த பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து இறந்தவரின் தகப்பனார் அளித்த புகாரின் பேரில் எரவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story