விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை 

பைல் படம் 

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் விஷம் குடித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்தநிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பகவதி பெருமாள் மகன் கண்ணன் என்ற பெருமாள் பிள்ளை (24). இவர் சமையல் வேலை செய்து வந்தார். இவருக்கு சரியாக வேலை கிடைத்ததால் விரக்தியிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கண்ணன் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் விஷம் குடித்த நிலையில் கண்ணன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கண்ணன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story