வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பி அன்டு டி காலனி 16வது தெருவைச் சேர்ந்தவர் பால்துரை மகன் சண்முகவேல் (38). பிளஸ் போர்டு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழிலுக்காக மனைவியின் 12 பவுன் நகையை அவருக்குத் தெரியாமல் விற்றுவிட்டாராம். இந்த விபரம் அவரது மனைவிக்கு தெரியவரவே கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சண்முகவேல் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story