மனஉளைச்சலால் வாலிபர் தற்கொலை

மனஉளைச்சலால் வாலிபர் தற்கொலை

பைல் படம்

விழுப்புரம், மோட்சகுளத்தை சேர்ந்த பெயின்டர் கணேஷ் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் வட்டம், மோட்சகுளம், மகாலெட்சுமி நகரைச் சோ்ந்த சுதாகா் மகன் சங்கா் கணேஷ் (19), பெயிண்டா். இவருக்கு கோமளவள்ளி என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.இந்த நிலையில், கோமளவள்ளி குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, புதுவை மாநிலம், மடுகரையில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தாா். இதை சங்கா் கணேஷ் கண்டித்ததால், தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த சங்கா் கணேஷ் வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story