வேலைக்கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

வேலைக்கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வாகை பகுதியில் வேலைகிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த வாகை கிராமம் அடஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டில்லிராஜி (வயது 33)வேலைக்காக பணம் கட்டியிருந்த நிலையில் வேலை கிடைக்கவில்லை .இதனால் மனவேதனையில் இருந்த டில்லிராஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story