செங்கல்பட்டு: திருநங்கையுடன் வாலிபர் தற்கொலை

செங்கல்பட்டு: திருநங்கையுடன் வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு: திருநங்கையுடன் திருமணமான வாலிபர் தற்கொலை
திருநங்கையுடன் ஏற்பட்ட பழக்கத்தை மனைவி கண்டித்ததால் திருநங்கையுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் ராமு (22), இவருக்கும் விமலா என்ற பெண்ணிற்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் ராமுவுக்கு, அதே பகுதியை சேர்ந்த சரத் என்ற சரளா (19) என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதையறிந்த விமலா கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமு மற்றும் திருநங்கை சரளா இருவரும், பாலாற்று பகுதியில் உள்ள மரத்தில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக பாலாற்றில் மீன் பிடிக்க சென்றவர்கள், மரத்தில் தூக்கிட்டு இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இருவரது உடலையும் மீட்டு, விசாரித்து வருகின்றனர். திருநங்கையுடன் திருமணமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story