இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

 புதுக்கடை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். 

புதுக்கடை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் .இவர் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று புதுக்கடை - கருங்கல் ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளையம்பலம் அருகில் வைத்து எதிரில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் கொல்லங்கோடு பாத்திமா நகரை சேர்ந்த அனீஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

இதில் சுபாஷ் பைக கில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.பலத்த காயமடைந்த அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் காயமடைந்த அனீஷும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story