ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

பைல் படம் 

மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணப்பாறையில் உள்ள திருச்சி ரெயில்வே மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இறந்தவர் மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த கார்த்தி (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story