ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

 உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த, பயணியர் விரைவு ரயில் மோதி, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story