இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் பாய்ந்தில் வாலிபர் பலி

இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் பாய்ந்தில் வாலிபர் பலி
பலியான வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டம்,அருமனை அருகே இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் பாய்ந்ததில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செங்கோடி வலியவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகன் டேனியேல்.அருமனை அருகே கடையாலுமுடு காவுவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அனிகுட்டன்.டேனியேலும், அனிகுட்டனும் நெருங்கிய நண் பர்கள். இந்த நிலையில்,இவர்கள் கொல்லங்கோடு பகுதியில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக அருமனை நோக்கி பைக்குகளில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அண்டுகோடு பகுதியில் வந்தபோது அனிகுட்டன் ,டேனியல் ஆகியோர் வந்த பைக்கின் குறுக்கே திடீரென நாய் பாய்ந்தது.இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் உடன் வந்த நண்பர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை புலனின்றி டேனியேல் பரிதாபமாக உயிரிழந் தார். படுகாயம் அடைந்த அனிகுட்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரில் அருமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story