தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

பலி

வாலாஜா அருகே தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா பழைய கண்டிகை சுபம் நகரை சேர்ந்த ஜெயனுல்லா என்பவரின் மகன் ஆசிப் மீரான் (20). இவர் தனது நண்பர்கள் புருஷோத்தமன் (19), பிரகாஷ் (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வாலாஜாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சுங்கச்சாவடி அருகே வந்தபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் (சென்டர் மீடியன்) மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆசிப்மீரான் பரிதாபமாக இறந்தார்.

மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story