தூத்துக்குடியில் பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு பார்வதி தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஆதிராஜா (33). இவர் லோடு மேனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் உப்பாற்று ஓடை அருகே பைக்கில சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story