மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழராதாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பரம சிவம் இவரது மகன் மணிகண்டன். இவர் தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதற்காக இவர் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மின் சாதன பொருட்களை எடுத்துச் சென்ற போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார். இது குறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story