மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

வேலாயுதம்பாளையத்தில் பணியின் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 42. இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்படும், பழைய அம்மன் பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 9-ம் தேதி காலை பத்தே கால் மணியளவில், பேக்கரி கடை முன்பு இருந்த இரும்பு பிளேட் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரும்பு பிளேட்டை அகற்றியபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பியில் பட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில், மின்சாரம் வெங்கடேசை தாக்கியதில், சம்பவ இடத்தில் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அறிந்த வெங்கடேசன் மனைவி அலமேலு வயது 40 என்பவர், இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த வெங்கடேசன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story