மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

பணியின் போது இரும்பு கதவில் கை வைத்ததால், மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
பணியின் போது இரும்பு கதவில் கை வைத்ததால், மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, வெளியம்பாக்கம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ஹரி வயது 34. இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, டெக்ஸ் பார்க்கில், அட்லஸ் நிறுவனத்தின், மகளிர் விடுதியில் மே 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவில் கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஹரியின் சகோதரர் ரமேஷ் வயது 43 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த ஹரியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story