மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு

மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு
பைல் படம்
நாகர்கோவிலில் மதுவில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி பள்ள விளை என்ற இடத்தை சேர்ந்தவர் அனிஷ் (32). இவர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அனிஷ் உயிரிழந்தார். இது குறித்து அனிஷ் மனைவி மோனிகா (25)என்பவர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story